கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த
குளிர்தருவே  தருநிழலே நிழல் கனிந்த கனியே
ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண்  ணீடை மலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே  சுகத்திலுறும்  பயனே
ஆடையிலே  எனைமணந்த மணவாளா  பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே.

– வள்ளலார்

பண்ணையும்,கோடையும்

கடுங்கோடையில் இருத்தலாக இருக்கின்ற தாவர மேலாண்மையையும், நகர்தலாக இருக்கின்ற ஆநிரைகளையும் ஒருங்கே கையாள்வதின்மூலம் பண்ணையை நல்ல திசையைநோக்கி நகர்த்த முடியும்.

தாவர மேலாண்மை

கோடையில் தாவரங்கள் உணவு தயாரிக்க தேவையான உத்திகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்கும் பட்சத்தில் உயர் விளைச்சலைப்பெறமுடியும்.

கோடைகால மேலாண்மையின் சிறப்பம்சங்கள்:

  • கீரைகளில் அதிகபட்ச விளைச்சல்
  • கனிதரும் மரங்களின் சுவையேறிய விளைச்சல்
  • வெயிலைக்குடித்து வளரும் முருங்கை,மாதுளை,பப்பாளி போன்ற குறுமரங்களின் உயர்தர விளைச்சல்.

ஆநிரை மேலாண்மை

கோடையில் ஆநிரைகளின் வெப்பம் தணிக்கும் உத்திகளைக்கையாள்வதின் மூலம் அவற்றின்  ஆற்றலை முழுமையாகப்பெறமுடியும்.

கோடைகால மேலாண்மையின் சிறபம்சங்கள்

  • கோடையில் பெரிதாக நோய் தொற்று வர வாய்பில்லை
  • பகலில் பெரும்பாலும் மரத்தடியிலும்,இரவில் கட்டாந்தரையில் கிடையமர்த்துவதாலும் கொட்டகை பராமரிப்பு நேரம் குறையும

காடு கவின் அழிய உரைஇ கோடை

நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்க்

கண்விடத் தெரிக்கும் மண்ணா முத்தம்

கழங்கு உறழ் தோன்றல  பழணங்குழித்தாஅம்

இன்களி  நறவின் இயல் தேர்  நன்னன்

விண்பொரு  நெடுவரைக்  கவாஅன்

பொன்படு  மருங்கின் மலை இறந்தோரே”

                                                                         -அகநானூறு

காடு கவின் அழிய உரைஇ கோடை

நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்க்

கண்விடத் தெரிக்கும் மண்ணா முத்தம்

கழங்கு உறழ் தோன்றல பழணங்குழித்தாஅம்

இன்களி  நறவின் இயல் தேர்  நன்னன்

விண்பொரு  நெடுவரைக்  கவாஅன்

பொன்படு  மருங்கின் மலை இறந்தோரே”

 -அகநானூறு

தாவர கழிவு மேலாண்மை

  • சிறுதானியங்களின் கூளங்கள் மரபுக்குடிலின் மூலப்பொருளாக பயன்படும்.
  • பாசிப்பயறு, உளுந்து, வேர்கடலை உள்ளிட்ட பயிர்களின் கழிவுகள் ஆநிரைகளின் உணவாகப்பயன்படும்

விலங்கு கழிவு மேலாண்மை

  • ‘மாட்டு எரு மறுவருடம் , ஆட்டு எரு அந்த வருடமே’ என்பது பழமொழி, அதற்கேற்ப அந்த இரண்டு எருக்களையும் முறையாக நிலத்திற்கு திருப்புவதின்மூலம் நிலத்தில் உயர் விளைச்சலைப்பெறமுடியும்.
  • கோழி எரு மிகவும் சூடானது அதன் சூட்டை  வேகமாகக்குறைக்க திறன்மிகு நுண்ணுயிரியைப்பயன் படுத்துவதின் மூலம் தரமான உரம் கிடைக்கப்பெறும்.

கோடையும்,விழாக்களும்

கோவில் திருவிழாக்கள் பெரும்பாலும் கோடையில்தான் கொண்டாடப்பெறும் .காரணம் விழா என்பதே  கொண்டாடுவதற்கானது. விழாவினை சிறப்பிக்கும் முகமாக அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் தன்மை கோடைக்கு உண்டு. தவிர விதை நேர்த்தியின் மூல வடிவமான முளைப்பாரியும், மாரியை வரவழைக்கிற அம்மன் வழிபாடும் சேர்ந்துகொண்டால் கோடைகால திருவிழா மேலும் அழகுபெறுகிறது.

Close