"மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க "
கவனம் குவித்தல்
மக்கள் நெரிசல் அதிகமிருக்கும் மாநகரத்தின் தெருவோர தேநீர்க்கடைகளை கவனித்திருக்கிறீர்களா?
மாஸ்டர் ஒரு டீ சக்கர கம்மியா! மாஸ்டர் ஒரு லைட் டீ சக்கர கொஞ்சம் தூக்கலா! மாஸ்டர் மூனு டீ. அதுல ஒன்னு வித்தவுட், ஒன்னு லைட்டா, ஒன்னு நார்மல் டீன்னு எத்தனை விதமாகக்கேட்க முடியுமோ அத்தனை விதமான வார்த்தைகள் ஒளித்துக்கொண்டேயிருக்கும். இவ்வளவு ஏன் நாமே எப்போதேனும் தேநீர் கடைக்குச்சென்றால் நம் வாயிலிருந்தும் அதே வார்த்தைதான் வரும்.
பணம் கொடுத்தால் எப்போது என்ன வடிவத்தில் கேட்டாலும் நமக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்ததில் இருக்கிறது முதலாளித்துவத்தின் வெற்றி. வீட்டில் சரியான அளவீடுகளைக்கொண்ட கரண்டியின் துணையோடு சமைத்துமே சில நேரங்களில் உப்போ, இனிப்போ, காரமோ கூடக்குறைய ஆகிவிடுகிறதே அது எப்படி?
ம்! வெரி சிம்பிள் எல்லாமே கவனக்குறைவுதான். ஒரு செயலை கூர்ந்து அவதானித்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிற நம் நிலைபாடுதான் காரணம்.
கொண்டையில் மாட்டுகிற க்ளிப் தொலைந்து விட்டதே! எங்கே வச்சேன்னு தெரிலயே! இப்போ அலுவலகம் கிளம்பனும் என்னா செய்ய? ஒன்னும் பிரச்சனையில்ல புதிதாக வாங்கிக்கொள்ளலாம்.அப்புறம் டீவி ரிமோட் தொலைஞ்சிபோச்சே! எங்க வச்சேன்னு தெரிலையே இப்போ டீவில செம்மையான படம் போடுறானே என்ன பன்றது ப்ச் பிரச்சனையே இல்லை புதிதாகவாங்கிக்கொள்ளலாம்.
இப்படி எது ஒன்றையும் இழந்ததிற்காக வருத்தப்படாமல் புதிதுபுதிதாக வாங்கிகொண்டே இருக்கலாம். விளைவு எந்த வேலையிலும் கவனம் குவிக்க முடியாமல் பேயாய் அலைவதுதான் மிச்சம்.
கரண்டியின் துணையில்லாமல் வந்திருக்கும் விருந்தினர்களுக்கு கருப்பட்டியை உடைத்து சரியான இனிப்புச்சுவையோடு காபி போடும் வித்தை தெரிந்தவர்கள் இன்னும் இருக்கிறார்களென்றால் கவனத்தை ஒருபோதும் சிதற விடாத தன்மைதான் அதற்குக்காரணம்.
மண் பானையில் சமைக்கும்போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் மொத்த உழைப்பும் கெடுவது மட்டுமல்ல. மண்பானை உடையும் ஆபத்தும் அதில் இருப்பதினால் நம் கவனம் மொத்தமும் சமையில் கூர்மைகொண்டிருக்க வேண்டும். மண்பானையில் நன்கு சமைத்துப்பழகியபிறகு மண்பாண்டம் செய்யக்கற்றுக்கொள்ள போகலாம்.
அதற்கு மண் தேர்வு செய்வது, நீர்விட்டு குழைப்பது பின் அச்சிலேற்றி நாம் நமக்குத்தேவைப்படும் வடிவம் கொண்டு வரும்போது கவனம் குவியப்பெற்ற மனிதர்களாக மாறியிருப்போம்.
மழைக்குளியல்
மழைநீரில் பெருமளவு தழைச்சத்து நிறைந்து காணப்படுவதால் மழையில் நனைந்த ஆடு, மாடு உள்ளிட்ட ஆநிரைகள் புத்துணர்வு பெற்றும், மரம் செடி கொடிகள் கூடுதல் பச்சை கட்டியும் காணப்படும். சோம்பலில் இருக்கும் பூமியை அவ்வப்போது வந்து புத்துணர்ச்சியூட்டிச்செல்லும் அழையா விருந்தாளி வான்மழை.
அந்த விருந்தாளியை நாம் வரவேற்கும் முகமாக மழைக்குளியலில் ஈடுபடலாம். மழையில் நனைந்தால் சளி பிடிக்கும், காய்சல் வருமே என்று பயப்பட வேண்டாம். உடலிலிருந்து சளி வெளியேறுவதும், உடல் வருடத்திற்கு இருமுறை காய்ச்சல் காண்பதும் உடலின் நன்மைக்கே…
More Information:
- Minimum Age: 8 years
- Half Day Trip
- Available Year-round


