“சொத்தைப்போல வித்தை பேணு”
-கிராமத்து சொலவடை
ஆநிரை வகைகள்
  • மாடுகளில் புலிக்குளம், தென்பாண்டி, ஆலம்பாடி, காஞ்சிக்குட்டை, பர்கூர் எனவும்..
  • ஆடுகளில் மேச்சேரி, கீழக்கரிசல், கொடி, பள்ளை, கன்னி எனவும்..
  • கோழிகளில் பெருவிடை, சிறுவிடை, கருங்கோழியென பல ரகங்களில் அந்தந்த மண்ணிற்கேயுறித்தான குணங்களோடு காணப்படுகின்றன. இவற்றில் நாம் வாழும் நிலப்பரப்பிற்கு எந்த ரகம் ஒத்திசைந்து போகுமோ அதனைத்தேர்வு செய்தல் அவசியம்.

பறவைகள் மற்றும் பூச்சியினங்கள்

உயிரின வகைகளான தாவர வகைகளையும், விலங்கின வகைகளையும் சரியான தரமானவற்றைத்தேர்வு செய்து தோட்டம் அமைக்கிற பட்சத்தில் இவ்விரண்டையும் இணைக்கிற புள்ளியாக இருக்கிற பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் உங்கள் தோட்டத்திற்கு படையெடுத்து இயற்கையை சமநிலையோடு வைத்திருக்க உதவும்.

Close