"முரவு வாய்க்குழசி முறி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடுஊன், புழுக்கல்"

-பெரும்பாணாற்றுப்படை
சமையல்

முறைகளும், வகைகளும்.

சமையல் என்பது நாம் வாழும் திணையில் கிடைக்கப்பெறுகின்ற அனுபவத்தின் விளைகனி. அக்கனியின் முழுமையான பலனைப்பெற சமைத்தலின் முறையும், வகையும் முக்கிய பங்காற்றுகின்றன.
விறகடுப்பில்சமைப்பது,மண்பாண்டங்களைப்பயன்படுத்துவது, அம்மி, ஆட்டுரல் திருகை, உரல்போன்றவற்றைப்பயன்படுத்துவதின் மூலம் சமைத்தலில் தற்சார்பையும்…
அறுசுவை உணவை தின்னுதல், அருந்துதல், குடித்தல், நக்குதல், துய்த்தல், விழுங்குதல், மெல்லல் என்று வெவ்வேறு வடிவங்களில் சமைப்பதின் மூலம் திணைக்கோட்பாட்டிற்கு மிக நெருக்கமான ஆரோக்கிய வாழ்வையும்  பெறமுடியும்.
mugapu

சுடுதல்- கடித்துண்ண

முறையான அடுப்பு, பாத்திரங்களில்லாத காடுகளில் கிடைக்கப்பெறுகிற சருகுகள், சுள்ளிகளை எரியூட்டி சமைக்கும் வடிவம். மிகவும் தொன்மையான வடிவமான இது பழங்குடிகள் மற்றும் ஒருசில கிராமங்களில் நடைமுறையிலிருந்தாலும்கூட ஆடி பதினெட்டாம் நாள் தேங்காய் பழம் சுட்டு சாப்பிடும் விழாவாக இப்போது வரை நடைமுறையிலிருப்பது இதன் சிறப்பு.

  • கிழங்கு சுடுதல்
  • பனம்பழம் சுடுதல்
  • இறைச்சி சுடுதல்
  • கருவாடு சுடுதல்.

வறுத்தல்- கொறிக்க

முறையான அடுப்பு, மண்பாண்டம், கரண்டி உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு கொறித்தல் உணவுகளை உற்பத்தி செய்யும் வடிவம்.

  • கடலை வறுத்தல்
  • அரிசி வறுத்தல்
  • சோளம் வறுத்தல்
  • புளியமுத்து வறுத்தல்
coffee

துவையல்- நக்கிச்சாப்பிட

முறையான அடுப்பு மண் பாண்டம், அம்மி அல்லது ஆட்டுரல் துணைகொண்டு தயாரிக்கப்படும் உணவுமுறை.

எகா.

  • தேங்காய் துவையல்
  • பிரண்டை துவையல்
  • கானத்துவையல்
coffee

துவையல்- நக்கிச்சாப்பிட

முறையான அடுப்பு மண் பாண்டம், அம்மி அல்லது ஆட்டுரல் துணைகொண்டு தயாரிக்கப்படும் உணவுமுறை.

எகா.

  • தேங்காய் துவையல்
  • பிரண்டை துவையல்
  • கானத்துவையல்
leaffood

அவித்தல்- மெல்லுதல்

முறையான அடுப்பும், மூடியுடன் கூடிய மண்பாண்டம் மட்டுமே போதுமானதாக இருக்கும் இந்த அமைப்பு நீரில் அவித்தல், நீராவியில் அவித்தல் எனும் இரண்டு வடிவங்களைக்கொண்டிருக்கும்.

எகா.

    • கிழங்கு அவித்தல்
    • இட்லி அவித்தல்
    • கொழுக்கட்டை அவித்தல்

கடைதல்- துய்க்க

முறையான அடுப்பு ,மண்பாண்டம், மத்து போன்றவை தேவைப்படும் வடிவம்

எகா

    • கீரைக்கடையல்
    • கத்தரிக்காய் கடையல்
    • பருப்பு கடையல்

சும்மா குழம்பு- பிசைந்துண்ண

காய்கறிகளை வெட்ட ஒரு கத்தியும், நறுக்கிய காய்கறிகளை மொத்தமாக சேர்த்து பிசைய ஒரு பாத்திரமும் மட்டுமே போதுமானது சும்மா குழம்பு செய்ய.

Close