"கிழங்குகீழ் வீழ்ந்து தேன்மேல் தூங்கி
சிற்சில வித்திப் பற்பல் விளைந்து"
-நற்றினை
வித்து
பண்ணைக்குத்தேவையான கீரைகள், காய்கறிகள், மூலிகைகள், செடிகொடிகள், மரங்கள், சிறுதானியங்கள்,உள்ளிட்ட தாவர வகைகள்….
ஆடு, மாடு, கோழி, வாத்து, கழுதை போன்ற ஆநிரைகள் அனைத்தும் விதைகளே…
தற்சார்பைப்பொருத்தவரை இவற்றில் நாட்டு ரகங்களை தேர்வு செய்து சேகரிப்பதில்தான் இருக்கிறது நமது சாமர்த்தியம். அதற்கு நெடும்பயணத்தையும், காத்திருப்பையும், பொறுமையையும் நம்மிடமிருந்து கேட்கும். தரம் வேண்டுமென்றால் அது கேட்கும் விலையைக்கொடுத்துத்தானே ஆக வேண்டும்.
தாவர வகைகள்
காய்கறிகள்
கத்தரி, வெண்டை, கொத்தவரை உள்ளிட்ட செடிக்காய்கறிகள்...
கீரைகள்
புதினா, பொன்னாங்கன்னி, வல்லக்கீரை உள்ளிட்ட மறுதழைவுக்கீரைகள்...
தானியங்கள்
கம்பு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட தானிய வகைகளையும் தேடித்தேடி கொணர்ந்து சேர்க்க வேண்டும்.
"ஆற்று அயல் இருந்த இருங்கோட்டு அம்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்"
-குறுந்தொகை