"பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்"
எஸ்கோபர் வழித்தடம்
“எஸ்கோபர் வழித்தடம்” என்னும் இந்த தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளை பறவை பாலா பல்வேறு தருணங்களில் இணையங்களில் எழுதியதாக அறிகிறேன். வலசைபோகும் பறவை கூடடையும் மரங்களிலிருந்தெல்லாம் கொத்திக்கொண்டு வரும் பல்வேறு தானியங்கள் போல இருக்கிறது இந்த தொகுப்பு.
தன்னனுபவத்தில் இருந்தும், முன்னோடிகளிடமிருந்தும், மண்ணிலிருந்தும், மரங்களிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் தான் கண்டடைந்தவற்றை ஒரு யாத்ரீகனின் பயணக்குறிப்புகள் போல சுருக்கமாக, சுவாரஸ்யமாக சொல்லிச்செல்கிறார்.
வழக்கமான இலக்கியப் பொழுதுபோக்கு போல, போகிற போக்கில் சொற்களை வாரி இரைக்காமல் செயல் என்னும் களத்தில் உழுது பயிர் செய்பவர். ஆதலால் தகவல்களை தன் அனுபவத்தோடும் தன் பயணங்களோடும் இணைத்து எழுதி இருக்கிறார்.
பாலாவின் எழுத்து வாசிப்பவரின் மனங்களில் பச்சயம் பிடிக்கட்டும்.
– சந்தோஷ் நாராயணன்.
வலசைப்பாதை
வலசைப்பாதை’ பறவையின் இரண்டாவது புத்தகம்.
வலசைப்பாதை உருவான கதையையும், அவை வளரும்போது எதிர்கொண்ட சிக்கல்களையும் பேசுகிறது.
தற்சார்பிலிருந்து விடுபட்டு நகர்மயமாகிப்போன சட்டத்தரணி, மருத்துவர், பொறியியலாளர், தொழிலதிபர் என வெவ்வேறு பெயர்களை ஒவ்வொரு கிராமமும் பெருமை பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நகரத்திலிருந்து விடுபட்டு மரபுக்கு திரும்பியோரின் வாழ்க்கையை அதே பெருமையோடு பதிவு செய்ய நினைத்து எழுதினேன்.
அவர்களே வலசைப்பாதையெனும் வாகனத்தின் முகம், முகவரி, அடையாளம் அனைத்தும்.
அவர்கள் மட்டுமில்லாது பறவையின் வலசையில் தன்னையும் இணைத்துக்கொண்ட மாடு, நாய், ஊர்வன பறப்பன, செடி, கொடிகளின் வாழ்வியலையும் மறக்காமல் பதிவு செய்திருக்கிறேன்.
தற்சார்பின் அனைத்து கன்னிகளும் அறுபட்டு நிற்கும் இவ்வேளையில் சுற்றத்தாரின் சுடுசொற்களையும் சகித்துக்கொண்டு தினமும் அயராது மண்ணில் உழைத்துக்கொண்டிருக்கும் என் உயிருக்கு இனிப்பான தம்பிகளையும், வலசைப்பாதைக்கு வெளியே முகம்தெரியாமல் இயங்கி வரும் தோழமைகளையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
‘வலசைப்பாதை’ யென்கிற இந்தப்புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது தற்சார்புக்கு திரும்ப வேண்டிய தேவையை வருங்கால தம்பி, தங்கைகளுக்கு ஏற்படுத்துமேயானால் இவை எழுதப்பட்டதின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைத்து மகிழ்வேன்.
தேவை ஏற்படின் ‘வலசைப்பாதை’ யின் பிற ஆளுமைகள் குறித்து வருங்காலத்தில் நிச்சயம் பதிவு செய்வேன் என்கிற நம்பிக்கையில் ….
– பறவை பாலா.
சங்கிலி
கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்கு திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக ஏழுவதுண்டு.
அந்த சந்தேகங்களை தீர்த்து வைக்கும் பொருட்டு தற்சார்பு வாழ்வியலில் இருக்கும் மேலாண்மைகளை நமக்குத்தெரிந்ததை, நாம் கற்றுக்கொண்டதை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் என்கிற புள்ளியில் உருவானதுதான் சங்கிலி.
மிக்காரைச் சேர்த்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்த்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
-இனியவை நாற்பது