"சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்த ......"
-அகநானூறு.
அசைவ உணவின் வகைகள்
கருனை
மாமிசத்துண்டுகளை நெய் அல்லது எண்ணெய்கொண்டு பொரித்தெடுக்கும் ஒருவகை உணவு.
வாட்டு
இறைச்சியில் மசாலா சேர்த்து தீயில் வாட்டி சமைக்கப்படும் ஒரு வகை உணவு.
வாடூன்
சமைத்ததுபோக மீதமாகும் மாமிசங்களை உப்பு, மஞ்சள் தடவி உப்பு கண்டம் போட்டு காய வைத்து பிறகு தேவைப்படும் நேரங்களில் சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த நுட்பம் மற்றெல்லாரையும் விட முல்லைநில பெண்களுக்கு கைவந்தகலை.
புழுக்கல்:
இறைச்சியை அவித்து சாப்பிடும் முறை