துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
-திருவள்ளுவன்
உண்பவர்களுக்கு நல்ல உணவுப் பொருட்களை விளைவித்துத்தருவதோடு சமைக்கப்பட்ட நல்ல உணவுகளை உண்பவர்களுக்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது அந்த மழையே.
மழைக்குளியல்
மழைநீரில் பெருமளவு தழைச்சத்து நிறைந்து காணப்படுவதால் மழையில் நனைந்த ஆடு, மாடு உள்ளிட்ட ஆநிரைகள் புத்துணர்வு பெற்றும், மரம் செடி கொடிகள் கூடுதல் பச்சை கட்டியும் காணப்படும். சோம்பலில் இருக்கும் பூமியை அவ்வப்போது வந்து புத்துணர்ச்சியூட்டிச்செல்லும் அழையா விருந்தாளி வான்மழை.
அந்த விருந்தாளியை நாம் வரவேற்கும் முகமாக மழைக்குளியலில் ஈடுபடலாம். மழையில் நனைந்தால் சளி பிடிக்கும், காய்சல் வருமே என்று பயப்பட வேண்டாம். உடலிலிருந்து சளி வெளியேறுவதும், உடல் வருடத்திற்கு இருமுறை காய்ச்சல் காண்பதும் உடலின் நன்மைக்கே…


