"தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா  தோரையும்  அறியக்  காட்டித்
திங்கட்  புத்தேள்  திரிதரும்"

-புறநானூறு

பண்ணையும், மாலையும்

“இருத்தலும், இருத்தல் நிமித்தமும் ‘என வினைமுடித்துத்திரும்பும் தலைவனை எதிர்நோக்கிக்காத்திருக்க வேண்டிய அவசியமில்லை தலைவிக்கு. இருவரும் புலங்குவது ஒரே தளம் என்பதால் பண்ணையின் மாலைநேர வேலையை பகிர்ந்துகொள்ள தினை மட்டுமல்ல மாலையும் சேர்ந்தே மயங்கும்.

இறங்கு வெயில்

மாலை நேர இறங்கு வெயில் நேரத்தில் பண்ணையில் தாவர மேலாண்மையில் மிக இலகுவான வேலையில் ஈடுபடலாம்.

  • பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல்.
  • பயிர்களுக்கு திரவ உரம் கொடுத்தல்.
  • காய்கறி கீரைகள் அறுவடை செய்தல்.
  • பழங்கள் பறித்தல்.

கூடடைதல்

கோடையில் ஆநிரைகளின் வெப்பம் தணிக்கும் உத்திகளைக்கையாள்வதின் மூலம் அவற்றின்  ஆற்றலை முழுமையாகப்பெறமுடியும்.

கோடைகால மேலாண்மையின் சிறபம்சங்கள்

  • பகலில் பெரும்பாலும் மரத்தடியிலும்,இரவில் கட்டாந்தரையில் கிடையமர்த்துவதாலும் கொட்டகை பராமரிப்பு நேரம் குறையும்
  • கோடையில் பெரிதாக நோய் தொற்று வர வாய்பில்லை

"பாலாழி  மீதுபடர்ந்த வெண்ணெய் -ஒரு
பந்தா  யுருண்டு  திரண்டதுவோ
மேலா  யுலகில்  ஒளிசெயவே -ஈசன்
விண்ணகமிட்ட விளக்கிதுவோ?
பொன் மரம்  காய்த்த கனியிதுவோ? இந்தப்
பூமகள்  ஆடும்  கழங்கிதுவோ?
கன்மன முங்களி  கொள்ளக் -கவினொளி
காட்டி  விளங்கும்  மதியிதுவோ?

                                           -மலரும்  மாலையும்.

“பாலாழி  மீதுபடர்ந்த வெண்ணெய் -ஒரு

பந்தா  யுருண்டு  திரண்டதுவோ

மேலா  யுலகில்  ஒளிசெயவே -ஈசன்

விண்ணகமிட்ட. விளக்கிதுவோ?

பொன் மரம்  காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள்  ஆடும்  கழங்கிதுவோ?

கன்மன முங்களி  கொள்ளக் -கவினொளி

காட்டி  விளங்கும்  மதியிதுவோ?

                               -மலரும்  மாலையும்.

“பாலாழி  மீதுபடர்ந்த வெண்ணெய் -ஒரு

பந்தா  யுருண்டு  திரண்டதுவோ

மேலா  யுலகில்  ஒளிசெயவே -ஈசன்

விண்ணகமிட்ட விளக்கிதுவோ?

பொன் மரம்  காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள்  ஆடும்  கழங்கிதுவோ?

கன்மன முங்களி  கொள்ளக் -கவினொளி

காட்டி  விளங்கும்  மதியிதுவோ?

                    -மலரும்  மாலையும்.

“பாலாழி  மீதுபடர்ந்த வெண்ணெய் -ஒரு

பந்தா  யுருண்டு  திரண்டதுவோ

மேலா  யுலகில்  ஒளிசெயவே -ஈசன்

விண்ணகமிட்ட. விளக்கிதுவோ?

பொன் மரம்  காய்த்த கனியிதுவோ? இந்தப்

பூமகள்  ஆடும்  கழங்கிதுவோ?

கன்மன முங்களி  கொள்ளக் -கவினொளி

காட்டி  விளங்கும்  மதியிதுவோ?

                               -மலரும்  மாலையும்.

மாலை உணவு

பண்ணையின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டபின்பு மிதமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

எகா

  • கருணை- பொறித்த உணவு.
  • பண்ணியம்- பணியாரம் போன்ற இனிப்பு உணவு.
  • மோதகம்- கொழுக்கட்டை.

கதைகள் பேசும் நேரம்

படுக்கைக்குச்செல்லும்முன் குடும்பத்துடன் முற்றத்தில் கதைகள் பேசுதல் தற்சார்பு வாழ்க்கையை மேலும் அழகுகூட்டும். பகல்நேர உழைப்பின் களைப்பு போக்க பேச்சின் வழியாக கடந்து போவோம்.

யாமம்

கதைகள் பேசிக்கொண்டேயிருக்கும்போது எப்போது தூங்கினோம் என்று தெரியாத வண்ணம் மெய்மறந்து  தூங்கியிருப்போம்

Reservation By Phone

+41 22 345 67 88

Reservation By Email

wellness@cozystay.com

Close