புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன்போல,...

-நற்றினை

எண்ணெய் குளியல்

விரைந்து ஒடிக்கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கைச்சூழலுக்குள் வருடத்திற்கு ஒருமுறைகூட எண்ணெய் தேய்த்து குளிக்க நமக்கு நேரமில்லை. ஆனால் வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கிறது தமிழர்வாழ்வியல் முறை.
எண்ணெய் தேய்த்துகுளிக்கும்போது உடலின் உட்புற அழுக்கு வெளியேறி உடல் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் குளியலின்போதுகடைப்பிடிக்க வேண்டியவை

  • எண்ணெய் தேய்த்த அரை மணி நேரத்திற்குள் குளித்துவிட வேண்டும்.
  • குளியலின்போது இளஞ்சூட்டு வெந்நீரில் குளிக்க வேண்டும்.
  • எண்ணெய் குளியலுக்குப்பிறகு உடல் வாத, பித்த, கப சூழலை சமநிலைப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருப்பதால் அன்று பகலில் கண்டிப்பாக தூங்கக்கூடாது.
  • கர்ப்பிணிகள், தீவிர நோயாளிகள், மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், எண்ணெய் குளியலைத்தவிர்த்தல் நலம்.
  • எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்ட அன்று அசைவ உணவைத்தவிர்த்திடல் வேண்டும்.
Close