"வான்குருவிக் கூடும் வன்கரையான புற்றும்
தேன்சிலந்தி இருட்டும் செய்யத் தெரிவதரிது"
-பழமொழி
புற்றுமண் குளியல்
இது மற்ற குளியல் முறையைக்காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. மண்ணுக்கு மேல் காணப்படும் அனைத்து வகையான சத்துக்களும் குளிப்பதின் மூலமாக எளிதாக கிரகித்துக்கொள்ள முடியும்.
ஆனால் மண்ணுக்கு கீழேயுள்ள சத்தை அவ்வளவு எளிதாக நம்மால் பெறமுடியாது. கரையானானது புவிக்கு கீழ் எவ்வளவு கடினமான பாறையாக இருந்தாலும் தன் கூரிய பற்களால் நொறுக்கி துகள்களாக்கி புவியின் மேற்பரப்புவரை கொண்டுவந்து அழகான வீட்டைக்கட்டுகிறது. அந்த புற்றுமண்ணை எடுத்து நாம் குளியலுக்கு பயன்படுத்தும்போது தேவையான சத்துக்களையும், உடல் வெப்பநிலையை சமமாக வைத்துக்கொள்ளவும் முடியும்.


