சேக்குவர் கொல்லோ தானே தேக்கின்
அகலிகை குவிந்த புதல்போல் குரம்பை
ஊன் புமுக் கயரு முன்றில்"
சேகரித்தல்
இயற்கையிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ அந்த பொருட்களின்மீது உழைப்பைச்செலுத்தி மதிப்புகூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தை விரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே நமக்கு வழங்கப்படும் கல்வி என்பது அந்த சந்தையை நுகரும் மந்தைகளை உருவாக்கும் முகமாகத்தான் அமைந்திருக்கின்றது. ஆனால் தற்சார்பு வாழ்க்கையை மேற்கொள்ளப்போகும் நாம் இயற்கை கொடுக்கும் பொருட்களை சேகரிக்கப்பழகும்போது மந்தையிலிருந்து விடுபட்ட மனிதர்களாவோம்.
வயிறு
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்கள். எனவே வயிற்றின் பசியைப்போக்க மிகச்சிறந்த உணவு வகைகளை இயற்கையில் சேகரிக்கும் அறிவைப்பெறுவது.
உயிர்
உணவை உட்கொண்ட உடல் நிலைத்து வாழத்தேவை அந்த உணவின் தரம். அந்தத்தரத்தை உறுதி செய்வது வித்து. எனவே வீரியமான விதைகளை தேர்வுசெய்யும் அறிவைப்பெறுதல்.
அறிவு
இயற்கையின் அறிவைப்பெற நாம் அனுகவேண்டியது முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை அல்ல. இந்த நூற்றாண்டிலும் இயற்கையை சிதைக்காவண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கிற எளிமையான மனிதர்களையும், இயற்கையையும்தான்.
பயன்
எவ்வளவு கவனமாக இந்த வாழ்க்கையை நகர்த்தினாலும் இந்த உடல் அவ்வப்போது நோயுறும். அதைக்களைவதற்கு இயற்கையில் கிடைக்கப்பெறுகிற மூலிகைகளை இனங்கண்டு சேகரிக்க பழக வேண்டும்.
வளர்ச்சி
தற்சார்பில் எல்லாம் சிறப்பாக அமையப்பெற்றாலுங்கூட நம் சிந்தனையானது நிற்காமல் இயங்கும் அதற்கு தீனிபோடும் முகமாக விளையாட்டு, கட்டுமானம், புதிய புதிய வாழ்க்கைமுறை பயிற்சிகளை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம். இல்லையேல் வயதானகாலத்தில் ஆன்மீகமானதோல்வியை சந்திக்க நேரலாம்.