"வம்பு பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின் ,வாராரே நம் காதலர்"
-குறுந்தொகை
ஆநிரைகள் மேலாண்மை
- சாரல் தொடரும் நிலையில் அயல் மகரந்தம் வெகுவாகக்குறையும். அப்போது தேனீக்களுக்கு உணவு வழங்குவதின் மூலம் தேனீக்கள் கலைந்துசெல்லாமல் பாதுகாக்க முடியும்.
- ஆநிரைகளுக்குத்தேவையான பசுந்தீவனங்களை அறுத்தவுடன் அப்படியே கொடுத்துவிடாமல் மழைநீர் வடிய காத்திருந்து கொடுக்க பண்ணையில் ஆடு,மாடுகள் மகிழ்ந்திருக்கும்.
- சாரலின்போது கட்டுத்தரையே கதியென்றிருக்கும் ஆநிரைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்றுதல் நலம்.
வாகடம்
அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு நோய்க்கூறுகளை கண்டறிந்து உடனுக்குடன் கைமருந்துசெய்து ஆநிரைகளைக்காத்தல் அவசியம்.