"கிழவிர் போலக் கேளாது செழீஇ
சேட்புலம்பு அகல இனிய கூறி"

-மலைபடுகடாம்.

சந்தையை அனுகுதல்

ஆதியில் நாம்  உணவுக்காக வேட்டையாடினோம். வேட்டையாடிய உணவை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதியோ அதற்குத்தேவையான அறிவோ நம்மிடம் இருக்கவில்லை. பிறகு மெல்ல மெல்ல நகர்ந்து மேய்ச்சல் சமூகமாக மாறினோம். பருவமழையைக்கணித்து ஆநிரைக்கழிவுகளை நிலத்திலிட்டு ஏர்பூட்டி மானாவாரி வேளாண்மை செய்தோம். அடுத்தக்கட்ட பாய்ச்சலாக நீரை ஓரிடத்தில் தேக்கி வருடம் முழுவதும் வேளாண்மை செய்து உபரியை பெருக்கினோம். விளைவு நாகரீகம் படைத்தோம்.

வேட்டையில் உணவைப்பகிர்ந்தோம்..

மேய்ச்சலில் பண்டமாற்று முறைக்கு வந்தோம்…

பள்ளத்து விளைச்சலின் உபரியில் கடைவிரித்தோம்….

எத்தனை உழைத்தாலும் இன்னும் ஓய்ந்திருக்க நேரம் போதவில்லை நவீனத்தில். என்ன செய்யலாம்? உணவுக்குத்தேவையான பொருட்களை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆங்… இந்த வேகம் போதாது… என்ன செய்யலாம்? சமைப்பதற்கு நேரமில்லை ஆதலால் நேரே உணவகத்திற்கு சென்று சாப்பிடலாம். இன்னும் வேகம் தேவைப்படுகிறது என்ன செய்யலாம்.? அய் ஐடியா! வீட்டிலிருந்த படியே உணவகத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம். அட செமல்ல. ஆனாலும் வீட்டிற்கு வரவழைத்து உண்ட உணவின் மிச்சம் அதன் எச்சில் பாத்திரத்தை கழுவுவதற்குத்தான் எத்தனை நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் வேறு ஏதேனும் வேலை செய்து பொருளீட்டலாம் அல்லவா? அந்த நேரத்தையும் அறுவடை செய்ய மனிதகுலம் கண்டுபிடிப்பு என்கிற பெயரில் எதைக்கொண்டு வந்து நிறுத்தப்போகிறதோ தெரிய வில்லை. நினைத்துப்பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது.

இந்த நவீன உலகத்தில் மனிதர்களின் முகத்தைப்பார்த்து உணர்வுகளைப்புரிந்து கொண்டு பேசுவது வெகுவாகக்குறைந்து கொண்டே வருகிறது. (உபயம்:கைபேசி எதிரில் அமர்ந்திருப்போரின் பேச்சுக்கு காதைமட்டும் கொடுத்துவிட்டு கைகள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதைப்போல கைப்பேசியை நோண்டிக்கொண்டேயி ருக்கிறது).

இது இப்படியே போனால் மனிதர்கள் முகத்திற்கு முகம்பார்த்து பேசும் பயிற்சி எடுத்தால் மட்டுமே பேச முடியும் என்கிற நிலை உருவானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நவீனம் றெக்கைகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட மரபு வழிப்பட்ட சந்தை உயிரோடிப்பது உலகின் எட்டாவது அதிசயம் என்று சொன்னால் அது மிகையில்லை.

ஆடு, மாடு, கோழி, வாத்து, பூனை, நாய், மீன், உள்ளிட்ட ஆநிரைகளின் சந்தை…..

காய்கறி, கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் மளிகைப்பொருட்களின் சந்தை….

கத்தி,கடப்பாறை,மண்வெட்டி உள்ளிட்ட வேளாண்மைக்குத்தேவையான கருவிகளின் சந்தை… இதில் எந்த சந்தையானாலும் அதில் நம்மையும் இணைத்துக்கொண்டு வாரந்தோறும் சென்று வர சந்தையை எளிதில் படித்துவிட முடியும்.

சந்தையின் சிறப்பம்சமே பேரம் பேசுவதுதான். சந்தையில் பேரம்பேசி பழகிவிட்டால் சந்தை நம்மை அப்படியே உள்ளிழுத்துக்கொள்ளும். பின் எப்போதும் நாம் அதைவிட்டு விலகிச்செல்ல முடியாதபடிக்கு சலிக்காத முகங்கள் நம்மைப்பார்த்து கண்சிமிட்டிக்கொண்டேயிருக்கும்.

மழைக்குளியல்

மழைநீரில் பெருமளவு தழைச்சத்து நிறைந்து காணப்படுவதால் மழையில் நனைந்த ஆடு, மாடு உள்ளிட்ட ஆநிரைகள் புத்துணர்வு பெற்றும், மரம் செடி கொடிகள் கூடுதல் பச்சை கட்டியும் காணப்படும். சோம்பலில் இருக்கும் பூமியை அவ்வப்போது வந்து புத்துணர்ச்சியூட்டிச்செல்லும் அழையா விருந்தாளி வான்மழை.

அந்த விருந்தாளியை நாம் வரவேற்கும் முகமாக மழைக்குளியலில் ஈடுபடலாம். மழையில் நனைந்தால் சளி பிடிக்கும், காய்சல் வருமே என்று பயப்பட வேண்டாம். உடலிலிருந்து சளி வெளியேறுவதும், உடல் வருடத்திற்கு இருமுறை காய்ச்சல் காண்பதும் உடலின் நன்மைக்கே…

 

More Information:
  • Minimum Age: 8 years
  • Half Day Trip
  • Available Year-round
Reservation By Phone

+41 22 345 67 88

Close