"உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப்,
பரூஉக் கொடி வலந்த மதலைபற்றித்
துருவின் அன்ன புன்தலை மகாரோடு
ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின்:

-மலைபடுகடாம்

காட்டாற்றுக்குளியல்

ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசெல்லும்போதும், மழைக்காலத்தில் உணவு சேகரிக்கச்செல்லும்போதும் நாம் காட்டாற்றை காணவோ கடக்கவோ நேரிடலாம். காட்டாறு பெரும்பாலும் மேடுபள்ளங்கள் நிறைந்த வளைவுகள் கொண்ட ஒழுங்கற்ற நிலையிலிருக்கும். கன மழையின்போது சுழிகொண்ட நுரையோடு ஆர்ப்பரித்து கடந்தோடும்.

நீர் வரத்துக்குறைவாக இருக்கும் காலங்களில் சமதளத்தைத்தேர்வுசெய்து குளிக்கலாம். அல்லது காட்டாறுகளைக்குறித்த மரபு அறிவைப்பெற்றிருக்கும்  கீதாரிகளின் துணையோடு குளிக்கலாம்.

Close