கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி,புடைநெறித்து
கதுப்பு விரித்தன்ன காழ் அகநுணங்கு அறல்.
-சிறுபாணாற்றுப்படை.
ஓடைக்குளியல்
மழைக்காலங்களில் மட்டுமே நீர் வரத்து இருக்கின்ற அதே நேரத்தில் ஆழமும், அகலமும் குறைவான அளவைக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பே ஓடையாகும். நீச்சல் தெரியாதவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் குளிப்பதற்கு ஏற்ற இடம். ஓடைக்குளியலின் சிறப்பே அதில் விதவிதமான வடிவங்களில் கற்களும் மணல்திட்டுகளும் அமைந்திருப்பதும்தான். எனவே குழந்தைகள் குளித்து விளையாடி மகிழ்ந்திட ஓடை ஒரு சிறந்த வரப்பிரசாதம்.


