"பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் -அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு"
– திரிகடுகம்
உள்கட்டுமானம்
- மனிதன் இல்லாமல் கடவுளால் வாழமுடியும். ஆனால் கடவுள்இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது.
- தற்சார்போடு வாழத்தேர்வு செய்திருக்கும் ஊரில் ஏற்கெனவே ஏதேனுமொரு தெய்வம் குடியிருக்கும். அந்த தெய்வத்தை துணைக்கழைத்துக்கொண்டு அந்த மனிதர்களோடு இரண்டறக்கலந்து பயணிக்க தற்சார்பு மேம்படும்.
- வருடத்திற்கொரு முறையோ அல்லது அந்தத்தெய்வத்திற்கு எப்போது விழா எடுக்கிறார்களோ அப்போது நாமும் அதில் பங்கேற்க வேண்டும்.
வெளிகட்டுமானம்
தோட்டத்தில் விளையும் பொருட்களை விற்று காசாக்க தொலைதூரப்பொட்டலங்களைத்தேர்வு செய்யாமல் குறைந்த பட்சம் ஐந்து கிலோமீட்டருக்குள்ளாகவே விற்பனை செய்தல் தற்சார்புக்கு நலம்.
நம் தோட்டத்து பொருட்களின் தரம் அறிந்து நேரிடையாகவே வந்து வாங்கிச்செல்லும் முகமாக ஒரு அமைப்பைக்கட்டுதல் இன்னும் கூடுதல் சிறப்பு
- Lorem ipsum dolor sit amet
- Lorem ipsum dolor sit amet
- Lorem ipsum dolor sit amet