"காடுஉறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை கவரீஇ குறுமுயல்
மன்ற இரும்புதல் ஒளிக்கும்"
-அகநானூறு
நகர்தல்
கீதாரிகள்
ஆடு மாடுகளை மேய்ச்சலுக்குட்படுத்தி கிடைபோடும் கீதாரிகளோடு பயணப்படும்பொழுது வெயில், மழையை எப்படி எதிர்கொள்வது, நீர் உள்ள இடங்களை கண்டடைவது, கிடையமர்த்தும் இடங்களை தேர்வு செய்வது, நோயுறும் காலத்தில் மருத்துவ முறைகளை தெரிந்துகொள்வது என ஒரு முழுமையான ஆநிரை மேலாண்மை அறிவைப்பெறமுடியும்.
ஆய்மகள்
முல்லைநில மூதாட்டிகளிடம் கற்றுக்கொள்ள நிறையவே செய்திகளிருக்கிறது. அதில் ஆநிரைகளை பராமரிப்பது மட்டுமல்ல. பால் பொருட்களை மதிப்புகூட்டுவது , வாடூன் தயாரிப்பது, எளிமையான சமையல் என அவர்களிடம் தெரிந்துகொள்ள செய்திகள் ஏராளம்.
திருவிழா
கிராமத்து திருவிழாக்களில் கலந்து கொள்வதின் மூலம் மக்கள் எப்படி ஒருங்கிணைகிறார்கள்? திருவிழாவின் நோக்கம், மக்கள் ஒன்றுதிரள்வதின்மூலம் ஏற்படுகிற சின்ன சின்ன முரண்பாடுகளை கலைந்து எப்படி கருத்துக்களையும், உழைப்பையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதையும் கற்றுக்கொள்ள தற்சார்பு மேம்படும்.
கீதாரிகள்
ஆடு மாடுகளை மேய்ச்சலுக்குட்படுத்தி கிடைபோடும் கீதாரிகளோடு பயணப்படும்பொழுது வெயில், மழையை எப்படி எதிர்கொள்வது, நீர் உள்ள இடங்களை கண்டடைவது, கிடையமர்த்தும் இடங்களை தேர்வு செய்வது, நோயுறும் காலத்தில் மருத்துவ முறைகளை தெரிந்துகொள்வது என ஒரு முழுமையான ஆநிரை மேலாண்மை அறிவைப்பெறமுடியும்.
ஆய்மகள்
முல்லைநில மூதாட்டிகளிடம் கற்றுக்கொள்ள நிறையவே செய்திகளிருக்கிறது. அதில் ஆநிரைகளை பராமரிப்பது மட்டுமல்ல. பால் பொருட்களை மதிப்புகூட்டுவது , வாடூன் தயாரிப்பது, எளிமையான சமையல் என அவர்களிடம் தெரிந்துகொள்ள செய்திகள் ஏராளம்.
திருவிழா
கிராமத்து திருவிழாக்களில் கலந்து கொள்வதின் மூலம் மக்கள் எப்படி ஒருங்கிணைகிறார்கள்? திருவிழாவின் நோக்கம், மக்கள் ஒன்றுதிரள்வதின்மூலம் ஏற்படுகிற சின்ன சின்ன முரண்பாடுகளை கலைந்து எப்படி கருத்துக்களையும், உழைப்பையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதையும் கற்றுக்கொள்ள தற்சார்பு மேம்படும்.
இயற்கை அறிவை பெறுதல்
முல்லைநிலத்தின் பெரும்பொழுது கார்காலம் எனவே மழைகுறித்த அறிவைப்பெறுதல் மிக முக்கியமானது.
வருடத்தில் பெரும்பாண்மையான நாட்கள் மழையில்லாமல் வறண்டு காணப்படும் முல்லைநிலமானது மழைவரும் காலத்தை வரவேற்கும் முகமான அந்த நிலத்தின் உயிரினங்கள் எப்படி தன்னை தகவமைத்துக்கொள்கின்றன என்பதை கூர்ந்து அவதானித்தல்.
எகா.அந்த வருடம் மழைப்பொழிவு அதிகமாக இருக்கப்போகிறதென்றால் மரத்தின் அடர்த்தியான பகுதிகளில் பறவைகள் கூடு கட்டுவது. மழைப்பொழிவு குறைவாக இருக்கப்போகிறதென்றால் மரங்களில் வெளிப்புறப்பகுதிகளில் காற்றோட்டமாக கூடு அமைத்தல்.