எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
தற்சார்பு
உணவின் தேவைக்காக இயற்கையில் கிடைக்கிற பொருட்களை சேகரிக்கும்போதும் சரி, உயிரின் மூல ஆதாரமாக விளங்குற விதைகளை தேடிச்செல்லும்போதும் நீங்கள் ஒன்றைப்புரிந்திருக்ககூடும். தற்சார்பென்றால் என்னவென்றே தெரியாமல் தற்சார்பில் இயங்கிக்கொண்டு இருக்கும் மனிதர்களிடமும், இந்த இயற்கையிடமும்தான் எத்தனை விதமான அறிவுகொட்டிக்கிடக்கிறதென்று. பஞ்சகவ்யா எப்படி செய்வதென்பதை நீங்கள் பயிற்சியின் மூலம் பெறலாம். அது இயற்கைவேளாண்மையை எப்படிச்செய்யலாம் என்று தெரிந்து கொள்வதற்கான உத்திகளில் ஒன்றுதானே தவிர அதுவே முழுமையான தற்சார்பு வாழ்வியலின் அடிப்படை அல்ல. தற்சார்பை முழுமையாகப்புரிந்துகொள்ள இயற்கையையும், ஆடு மாடுகள் மேய்க்கிற கீதாரிகளைப்போன்ற எளிய மனிதர்களிடம் பழகுவதின்மூலம் மட்டுமே சாத்தியம் வேறு வழியில்லை.
இருத்தல்
கீரைகள்
கீரைகளில் மட்டும் விதவிதமாக உற்பத்தி செய்து அதை எப்படி சந்தைப்படுத்துகிறார்கள் என்பது குறித்த அறிவைப்பெறுதல்.
காய்கறி
செடிக்காய்கறிக்கும், கொடிக்காய்கறிக்குமான வேறுபாட்டை உணர்தல். சந்தையில் மற்ற காய்கறிகளெல்லாம் விலையில் ஏற்ற இறக்கங்களைச்சந்திக்கும்போது கொடிக்காய்கறிகள் மட்டும் அதன் விலையை சீராக வைத்திருக்கும் மர்மமென்ன என்பதைத்தெரிந்துகொள்ளுதல்.
தானியங்கள்
ஒருகிலோ அரிசி உணவு நம் தட்டுக்கு வந்துசேர 5000லிட்டர் மறைநீரை உறிஞ்சிக்கொள்ளும்போது சிறுதானியங்கள் மட்டும் மானாவாரி வேளாண்மையின் மூலமே எளிதாக கிடைக்கிறதே அது எப்படி என்கிற புரிதலைப்பெறுதல்.
"மனிதர்கள் தங்களது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தங்களுக்கென்று கொள்கை வகுத்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள். அதுவே உலக வழக்கம்.ஆனால் பல்லுயிர்ச்சூழலை போற்றிப்பாதுகாக்க வேண்டுமென்று நினைக்கின்ற நாம் மனிதர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது. ஒருவேளை நமக்குள் பாகுபாடு பார்க்கும் எண்ணம் தோன்றினால் இந்த இயற்கை வாழ்வியல் பாதைக்கு நாம் தகுதியில்லை என்று அர்த்தம்."
– கோ.நம்மாழ்வார்