"வானம் பொழுதொரு சுரப்பக்கானம்
தோடுறு மடமானேறு புணர்ந்தியலப்
புள்ளு நிமிறு மாச்சிணை யார்ப்பப்
பழனங் கிழங்கு மிசையிற வறியாது
பல்லான் என்பிரை புல்லருந் துகளப்
பயங்கடை யறியா வளம்"
-பதிற்றுப்பத்து
அருவிக்குளியல்
மலைகளில் பெய்கின்ற மழைநீரானது அங்கேயே தங்கி விடுவதில்லை. அந்த மழைத்துளிகள் ஒன்று திரண்டு மரம், செடிகொடிகள், பட்டை, வேர், மண், சேறு, உள்ளிற்றவையோடு கலந்து அருவியாய் கொட்டுகிறது. அந்த அருவி நீரில் உடல் உபாதைகளை போக்க வல்ல மூலிகை அம்சங்களும், உடலை குளிர்வித்து மன அமைதியைத்தரக்கூடிய வலிமையும் இருக்கிறது என்பது ஒருவகையான நம்பிக்கை. அதனால்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அருவியில் குளிக்க அழைத்துச்செல்கிறார்கள்.
காட்டுக்குள்சென்று அருவியல் குளிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் பண்ணையில் மரபு வீட்டில் ஓடுகளில் இருந்து உள்முற்றத்தில் வழிந்தோடும் நீரில் குளிக்கலாம்.


