"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
புறவு வாழ்வியல் முற்றம்
இது முல்லைநில வாழ்வியலை முதன்மைப்படுத்தும் ஒரு வேளாண் அமைப்பு ஆகும். நமது முன்னோர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களை திணை அடிப்படையில் வகுத்து தந்திருந்தாலுங்கூட தற்போதைய நவீனம் நம்மை கட்டுக்கடங்காத “காசினோ”க்களாக மாற்றி நிறுத்தியதின் விளைவு எந்தத்திணை வாழ்கையையும் வாழத்தெரியாத தொலைவில் வந்து நிற்கிறோம்.சரி, இழந்ததை எண்ணி இனிப்பயனில்லை. எந்த நவீனம் நம்மை திணைக்கோட்பாட்டிலிருந்து வெளியேற்றியதோ அதே நவீனத்தின் துணையோடு பண்ணை நிலங்களை உருவாக்கி அதில் குறைந்தபட்ச தற்சார்பு வாழ்க்கைக்கு வழிவகை செய்து தருவதே எமது நோக்கம். அதற்கு மற்ற திணைகளைவிட முல்லைத்திணை அதிகப்படியான ஒத்துழைப்பை நல்கும் என்பது எமது நம்பிக்கை.




சேண் நாறு பிடவமொரு பைம் புதல் எருக்கி
சேண் நாறு பிடவமொரு பைம் புதல் எருக்கி
மரபுக்குத்திரும்புவோர் களம்
இரண்டு ஏக்கர் வாழ்வியல் நிலம்
ஐந்துபேர் கொண்ட குடும்பம் நிலத்தில் உழைத்து தங்கள் உணவுத்தேவையை பூர்த்தி செய்யவும், உழைப்பின் உபரியைக்கொண்டு ஒரு குடும்பத்தால் ஈட்டமுடியாத இயந்திரம் மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களைப்பெற்றுக்கொண்டு வாழ்வதற்குத்தேவையான வடிவம்.
ஐந்து ஏக்கர் வாழ்வியல் நிலம்
பத்துபேர் கொண்ட குடும்பம் நிலத்தில் உழைத்து தங்கள் உணவுத்தேவையை பூர்த்தி செய்யவும், உழைப்பின் உபரியைக்கொண்டு ஒரு குடும்பத்தால் ஈட்டமுடியாத இயந்திரம், வாகனம், மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களைப்பெற்றுக்கொண்டு வாழ்வதற்குத்தேவையான வடிவம்.
பத்து ஏக்கர் வாழ்வியல் நிலம்
சுமார் பதினைந்துபேர் கொண்ட குடும்ப நபர்களுக்குத்தேவையான உணவை உறுதிசெய்யவும், உழைப்பின் உபரியில் தனியொரு குடும்பத்தால் ஈட்டிக்கொள்ள முடியாத இயந்திரம், வாகனம், மின்சாரம் உள்ளிட்டவைகளை வெளியிலிருந்து பெற்றுக்கொண்டு நகரும் ஒரு வடிவம்.
20ஏக்கர் வாழ்வியல் நிலம்
முப்பது பேர் கொண்ட பெரிய குடும்பம் உழைத்து பிழைக்கவும், அதன் மூலம் கிடைக்கிற உபரியில் தனியொரு குடும்பத்தால் ஈட்டிக்கொள்ள முடியாத இயந்திரம், வாகனம், மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களை வெளியிலிருந்து பெற்றுக்கொண்டு நகரும் வடிவம்.
காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை
மகளிரோடு மள்ளர் மேன.
……………………………............................. அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ,
தோடு அர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில்

இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்”
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்”
50ஏக்கர் நிலப்பரப்பின் செயல் திட்ட வரைவு
திட்ட மதிப்பீடு
முதல்கட்ட ஆய்வுக்குப்பின் செயல் திட்ட மதிப்பீடு செய்தல்.
செயல் வடிவம்
வரைபடத்தை மீறாமல் நேர்த்தியாக வடிவமைத்தல்.
வரைபடம்
மதிப்பீடுகளுக்கேற்ற வகையில் வரைபடம் தயாரித்தல்.
பராமரிப்பு
விளைநிலத்தின் நோக்கம் நிறைவேறும் வரை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்.
கொள்முதல்
புதிய விளைநிலத்தை கட்டமைபதற்குத்தேவையான பொருட்களை வாங்குதல்.
எதிர்காலத்திட்டம்
விளைநிலம் கட்டமைக்கத்து
வங்கியதிலிருந்து கிடைக்கப்பெற்ற அனுபவத்தைக்கொண்டு பண்ணையின் எதிர்காலத்தை திட்டமிடல்.

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ”
“உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே “
-புறநானூறு