"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய  முறையான் சொல்லவும் படுமே"

– தொல்காப்பியன்

புறவு வாழ்வியல் முற்றம்

இது முல்லைநில வாழ்வியலை முதன்மைப்படுத்தும் ஒரு வேளாண் அமைப்பு ஆகும். நமது முன்னோர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களை திணை அடிப்படையில் வகுத்து தந்திருந்தாலுங்கூட தற்போதைய நவீனம் நம்மை கட்டுக்கடங்காத “காசினோ”க்களாக மாற்றி நிறுத்தியதின் விளைவு எந்தத்திணை வாழ்கையையும் வாழத்தெரியாத தொலைவில் வந்து நிற்கிறோம்.சரி,  இழந்ததை எண்ணி இனிப்பயனில்லை. எந்த நவீனம் நம்மை திணைக்கோட்பாட்டிலிருந்து வெளியேற்றியதோ அதே நவீனத்தின் துணையோடு பண்ணை நிலங்களை உருவாக்கி அதில் குறைந்தபட்ச தற்சார்பு வாழ்க்கைக்கு வழிவகை செய்து தருவதே எமது நோக்கம். அதற்கு மற்ற திணைகளைவிட முல்லைத்திணை அதிகப்படியான ஒத்துழைப்பை நல்கும் என்பது எமது நம்பிக்கை.

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொரு பைம் புதல் எருக்கி
-முல்லைப்பாட்டு
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொரு பைம் புதல் எருக்கி
-முல்லைப்பாட்டு

மரபுக்குத்திரும்புவோர் களம்

காடே கடவுள் மேன புறவே ஒள் இழை
மகளிரோடு மள்ளர் மேன.

-முல்லைப்பாட்டு
சமையல்

சமையல் என்பது வெறும் ருசியோடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. அது ஆரோக்கியத்துடன் சம்மந்தப்பட்டதும்கூட.

குளியல்

உழைத்த களைப்பு தீர்ந்திட

உடலில் அழுக்கு நீங்கிட

உடலும் மனமும் ஒருசேர புத்துணர்வு பெற்றிட நித்தமும் குளியல் அவசியம்.

சேகரித்தல்

தோட்டம் அமைத்து தற்சார்போடு வாழ நினைக்கிற ஒவ்வொரு குடும்பமும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது சேகரிக்கும் முறையைத்தான்.

……………………………............................. அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ,
தோடு அர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில்
-முல்லைப்பாட்டு
மனிதரின் அரியதும் ஆகும் தோன்றுதல் தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்”
-வளையாபதி
மனிதரின் அரியதும் ஆகும் தோன்றுதல் தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்”
-வளையாபதி

50ஏக்கர் நிலப்பரப்பின் செயல் திட்ட வரைவு

திட்ட மதிப்பீடு

முதல்கட்ட ஆய்வுக்குப்பின் செயல் திட்ட மதிப்பீடு செய்தல்.

செயல் வடிவம்

வரைபடத்தை மீறாமல் நேர்த்தியாக வடிவமைத்தல்.

வரைபடம்

மதிப்பீடுகளுக்கேற்ற வகையில் வரைபடம் தயாரித்தல்.

பராமரிப்பு

விளைநிலத்தின் நோக்கம் நிறைவேறும் வரை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்.

கொள்முதல்

புதிய விளைநிலத்தை கட்டமைபதற்குத்தேவையான பொருட்களை வாங்குதல்.

எதிர்காலத்திட்டம்

விளைநிலம் கட்டமைக்கத்து
வங்கியதிலிருந்து கிடைக்கப்பெற்ற அனுபவத்தைக்கொண்டு பண்ணையின் எதிர்காலத்தை திட்டமிடல்.

“உண்டி முதற்றே  உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ”
-புறநானூறு

“உண்டி முதற்றே  உணவின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே “
                                                               -புறநானூறு

Close